இலங்கை: நாளை முதல் 2வது கட்ட அமைதிப் பேச்சு
பாங்காக்:
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 2வது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நாளைதாய்லாந்தில் தொடங்குகின்றன.
நேற்று இரவே வன்னி பகுதியிலிருந்து இரண்டு இலங்கை ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பேச்சுவார்த்தையில்பங்கேற்கவுள்ள புலிகள் கொழும்பு வந்து சேர்ந்தனர். நார்வே தூதர் இல்லத்தில் அவர்களுக்கு இரவு விருந்துஅளிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தைக் குழுவில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வனுக்கும், வடகிழக்கு ராணுவ புலிகள் கமாண்டர் கருணாவுக்கும் இன்று அதிகாலை கொழும்பு விமானநிலையத்தில் இலங்கை அரசு ஏற்பாடு செய்த பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன.
பின்னர் ஆன்டன் பாலசிங்கம் தலைமையிலான புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர் ஒன்பது பேரும், அமைச்சர்ஜி.எல். பெய்ரிஸ் தலைமையிலான இலங்கை அரசின் 16 பேச்சுவார்த்தைக் குழுவினரும் ஒரே விமானத்தில்தாய்லாந்துக்குக் கிளம்பினர்.
முதற்கட்டப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்து முடிந்ததைப் போலவே இரண்டாவது கட்டப் பேச்சுக்களும்வெற்றி பெறும் என்று பாங்காக் சென்று கொண்டிருக்கும் போதே விமானத்தில் பாலசிங்கம் கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்தே இலங்கையில் அமைதிக்கான அனைத்து முயற்சிகளும் படிப்படியாகநடந்து வருகின்றன. அவற்றியில் வெற்றியும் கண்டு வருகிறோம். அதே போலவே இந்த இரண்டாவது கட்டப்பேச்சுக்களும் வெற்றி பெறும் என்றும் பாலசிங்கம் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளின் எதிரொலியாக வடகிழக்கு இலங்கை மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன்இருப்பதை என்னால் பார்க்க முடிந்ததும் என்றும் அவர் கூறினார்.
நாளை முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ள இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை பாங்காக்கிலிருந்து 32கி.மீ. தொலைவில் உள்ள நாகோர்ன் பாதோம் ஓய்வு விடுதியின் "ரோஸ் கார்டன்" ஓட்டலில் நடைபெறவுள்ளது.நாளை பகல் உணவு முடிந்த பின்னர் பேச்சுக்கள் தொடங்குகின்றன.
இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இரு தரப்பினர் சார்பிலும்கூட்டுப் படைகளை அமைப்பது குறித்து தான் இந்த இரண்டாவது கட்டப் பேச்சுக்களின் போது விவாதிக்கப்படஉள்ளது.
இதற்கிடையே இலங்கை சீரமைப்புப் பணிகளுக்காக நிதி திரட்டும் மாநாடு ஒன்று வரும் நவம்பர் 25ம் தேதிநார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெறும் என்று பெய்ரிஸ் தெரிவித்தார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications