இலங்கை: நாளை முதல் 2வது கட்ட அமைதிப் பேச்சு
பாங்காக்:
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 2வது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நாளைதாய்லாந்தில் தொடங்குகின்றன.
நேற்று இரவே வன்னி பகுதியிலிருந்து இரண்டு இலங்கை ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பேச்சுவார்த்தையில்பங்கேற்கவுள்ள புலிகள் கொழும்பு வந்து சேர்ந்தனர். நார்வே தூதர் இல்லத்தில் அவர்களுக்கு இரவு விருந்துஅளிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தைக் குழுவில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வனுக்கும், வடகிழக்கு ராணுவ புலிகள் கமாண்டர் கருணாவுக்கும் இன்று அதிகாலை கொழும்பு விமானநிலையத்தில் இலங்கை அரசு ஏற்பாடு செய்த பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன.
பின்னர் ஆன்டன் பாலசிங்கம் தலைமையிலான புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர் ஒன்பது பேரும், அமைச்சர்ஜி.எல். பெய்ரிஸ் தலைமையிலான இலங்கை அரசின் 16 பேச்சுவார்த்தைக் குழுவினரும் ஒரே விமானத்தில்தாய்லாந்துக்குக் கிளம்பினர்.
முதற்கட்டப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்து முடிந்ததைப் போலவே இரண்டாவது கட்டப் பேச்சுக்களும்வெற்றி பெறும் என்று பாங்காக் சென்று கொண்டிருக்கும் போதே விமானத்தில் பாலசிங்கம் கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்தே இலங்கையில் அமைதிக்கான அனைத்து முயற்சிகளும் படிப்படியாகநடந்து வருகின்றன. அவற்றியில் வெற்றியும் கண்டு வருகிறோம். அதே போலவே இந்த இரண்டாவது கட்டப்பேச்சுக்களும் வெற்றி பெறும் என்றும் பாலசிங்கம் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளின் எதிரொலியாக வடகிழக்கு இலங்கை மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன்இருப்பதை என்னால் பார்க்க முடிந்ததும் என்றும் அவர் கூறினார்.
நாளை முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ள இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை பாங்காக்கிலிருந்து 32கி.மீ. தொலைவில் உள்ள நாகோர்ன் பாதோம் ஓய்வு விடுதியின் "ரோஸ் கார்டன்" ஓட்டலில் நடைபெறவுள்ளது.நாளை பகல் உணவு முடிந்த பின்னர் பேச்சுக்கள் தொடங்குகின்றன.
இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இரு தரப்பினர் சார்பிலும்கூட்டுப் படைகளை அமைப்பது குறித்து தான் இந்த இரண்டாவது கட்டப் பேச்சுக்களின் போது விவாதிக்கப்படஉள்ளது.
இதற்கிடையே இலங்கை சீரமைப்புப் பணிகளுக்காக நிதி திரட்டும் மாநாடு ஒன்று வரும் நவம்பர் 25ம் தேதிநார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெறும் என்று பெய்ரிஸ் தெரிவித்தார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications