சவுதியில் வெளிநாட்டினர் டாக்சி டிரைவர்களாக பணியாற்ற தடை
துபாய்:
சவுதி அரேபியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் டாக்சிகளை ஓட்ட தடை விதிக்கப்படவுள்ளது. இதனால்ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் இந்தத் தடையை சவுதி அரசு கொண்டு வர உள்ளது. இந்தத் தடை 6மாதத்துக்குள் அமலுக்கு வர உள்ளது.
சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் இந்த முடிவை எடுத்துள்ளார். 6 மாதத்துக்குள் அனைத்து வெளிநாட்டினரையும்டாக்சி டிரைவர் பணியில் இருந்து நீக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் பின்னர் வெளிநாட்டினர் ஒருவர் கூட சவுதியில் எக்காரணம் கொண்டும் டாக்சி ஓட்டக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
சவுதி அரேபியாவில் லட்சக்கணக்கா இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கானவர்கள் லிமோசின் உள்படபல்வேறு வகையான டாக்சிகளை ஓட்டி வருகின்றனர். இந் நிலையில் அந்நாட்டின் இந்த முடிவால் இவர்கள் அனைவரும்ஒட்டுமொத்தமாக வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ரியாத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் பின்னர் மன்னர் வெளியிட்ட உத்தரவில்,சவுதியில் வெளிநாட்டினர் டாக்சிகள் ஓட்டுவதை தடை செய்ய வேண்டிய பொறுப்பை உள்துறை அமைச்சகம் மேற்கொள்ளும்.
செய்தித்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்தத் தடையை அமலாக்க வேண்டும். அதை மீறி தொடர்ந்து டாக்சிஓட்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே போல ஹஜ் புனிதப் பயணம் செய்யவும், உம்ரா செய்யவும், தொழில் தொடர்பாகவும் சவுதிக்கு வர குழுவாக விசா கேட்டால்அதை நிராகரிக்குமாறும் வெளியுறவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனித்தனியே தான் விசா கேட்டு விண்ணப்பிக்கவேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் பல்வேறு பணிகள் உள்நாட்டினருக்கே ஒதுக்கப்பட்டு வருகின்றன. அதில் டாக்சி டிரைவர் பணியும்சேர்க்கப்பட்டுவிட்டது.
சமீபத்தில் தான் ஓமன் நாட்டின் சில துறைகளின் டிரைவர் பணி உள்நாட்டினருக்கு ஒதுக்கப்பட்டது.