திமுகவின் அரசு ஊழியர் ஆதரவு கூட்டம் ரத்து
சென்னை:
அரசு ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து இந்த போராட்டத்துக்கு ஆதரவாக திமுகதொழிற்சங்கம் நடத்த இருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது.
இக் கூட்டம் இன்று நடப்பதாக இருந்தது. கன மழை காரணமாக இந்தக் கூட்டம் அண்ணா அறிவாலயம் பின்புறம்உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடப்பதாக இருந்தது.
ஆனால் நேற்று இரவே ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டு விட்டதால், இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகதிமுக அறிவித்துள்ளது.
ஸ்டிரைக் வாபஸ்: வீரமணி மகிழ்ச்சி
இதற்கிடையே அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதற்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது பொதுமக்களின் வெற்றி, பொது நலனுக்குக் கிடைத்த வெற்றி. இப் போராட்டத்தை பயன்படுத்தி அரசியல்லாபம் பெறக் கருதிய சில கட்சிகளுக்கு இந்த போராட்டம் வாபசானது மிகப் பெரும் அடியாகும் என்று கூறியுள்ளார் வீரமணி.












Click it and Unblock the Notifications