கருணாநிதிக்கு எதிராக வீடு வீடாக பிரச்சாரம்: இந்து முன்னணி அறிவிப்பு
கோவை:
இந்துக்களை கருணாநிதி திருடர்கள் என்று கூறியதாகக் கூறி திமுகவுக்கு அடுத்த தேர்தலில் ஓட்டுப் போடவேண்டாம் என்று வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய இந்து முன்னணி திட்டமிட்டுள்ளது.
இந்துக்களை திருடர்கள் என்று வாரணாசியில் இருந்து வரும் ஒரு இந்தி மொழி ஏடு கூறுவைத சுட்டிக் காட்டியகருணாநிதி, அது தவறு என்றும் இந்துக்களை உள்ளம் கவர் திருடன் என்று கூறவே விரும்புவதாகவும்கூறியிருந்தார்.
ஆனால், இதை இந்து முன்னணி தொடர்ந்து விவகாரமாக்கி வருகிறது.
கோவையில் இதுகுறித்துசெய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன்கூறியதாவது:
இந்துக்களை திருடர்கள் என்றும்,கொள்ளையர்கள் என்றும் கருணாநிதி கூறுகிறார். கேட்டால் நல்லஎண்ணத்துடன்தான் கூறினேன் என்கிறார்.
அவருக்கு இந்துக்களை விமர்சிப்பதே பிழைப்பாக போய் விட்டது. இந்துக்களின் ஓட்டுக்கள் இல்லாமல் அடுத்ததேர்தலில் ஒரு சீட்டைக் கூட அவரால் பிடிக்க முடியாது, வெற்றி குறித்து கனவு கூட காண முடியாது.
கருணாநிதிக்கு யாரும் ஓட்டுப் போடக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்றுபிரசாரம் செய்ய இந்து முன்னணி திட்டமிட்டுள்ளது.
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ள அதிமுக அரசுக்கு எங்களது பாராட்டுக்களைத்தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் அவர்.