பயங்கரவாதத்திற்கு எதிராக 12 மணி நேரம் ஒற்றைக் காலில் தவம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஜோதிமுருகன், பயங்கரவாதத்திற்கு எதிராக இளைஞர்கள் பொங்கி எழவேண்டும் என்பதை வலியுறுத்தி 12 மணி நேரம் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்து நூதன போராட்டம்நடத்தினார்.
புதுவை லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜோதிமுருகன் இதுபோல செய்வது முதல் முறையல்ல. கார்கில்போரின்போது, புதுவையிலிருந்து சைக்கிளிலேயே கார்கில் வரை சென்று இந்திய வீரர்களைச் சந்தித்து வந்தவர்இவர்.
தற்போது எங்கு பார்த்தாலும் பயங்கரவாதம், தீவிரவாதம் தலைவிரித்தாடுவதால், அதற்கு எதிரான உணர்வைஇளைஞர்கள் பெற வேண்டும், பயங்கரவாதத்தை ஒழிக்கும் உறுதியை இளைஞர்கள் பூண வேண்டும் என்றுவலியுறுத்தி நூதனப் போராட்டம் நடத்த முடிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து லாஸ்பேட் பகுதியில், மரக் கட்டைகளால் அமைக்கப்பட்ட கூண்டுக்குள், ஒற்றைக் காலில் நின்றுகாலை முதல் மாலை வரை நூதன தவப் போராட்டம் நடத்தினார்.
சுமார் 12 மணி நேரம் அவர் இப்படியே நின்றிருந்தார். இது அந்தப் பகுதி மக்களை வெகுவாகக் கவர்ந்தது.












Click it and Unblock the Notifications