கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு மது கடத்தல்: 2 பெண்கள் கைது
சென்னை:
கர்நாடகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 400 வெளிநாட்டு மதுபான பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து 2பெண்கள் உள்பட 3 பேரைக் கைது செய்தனர்.
வட சென்னை சரக போலீஸார் ராயபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரைசோதித்தபோது அதில் 40 பாட்டில்கள் வெளிநாட்டு மது இருந்தது. கர்நாடகத்திலிருந்து அது கடத்தி வரப்பட்டதுதெரியவந்தது.
காரிலிருந்தவர்களிடம் விசாரித்தபோது, ராயபுரம் தொப்பைமுதலி தெருவில் உள்ள ஒரு வீட்டில் மேலும்ஏராளமான மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் அந்த வீட்டை சோதனை போட்டனர். அப்போது 400க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள்சிக்கின.
இவை அனைத்தும் கர்நாடகத்திலிருந்து கடத்தி வரப்பட்டு, அதிக விலைக்கு சென்னையில் விற்கப்பட்டுவந்துள்ளது.
இதுதொடர்பாக யூசூப் சேட், அவரது மனைவி ஜாஸ்மின், அமீனா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications