கழிப்பறைகளை சுத்தம் செய்து ஏழைகளுக்கு உதவும் உள்ளம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை நகரில் வெல்டிங் வேலை பார்க்கும் லோகநாதன் என்ற இளைஞர் தனது ஓய்வு நேரத்தில் கழிப்பறைகளைசுத்தம் செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஆதரவற்றோருக்கு கொடுத்து சேவை செய்து வருகிறார்.

கோவை நஞ்சுண்டா புரத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். மதிய உணவுநேரம் உள்ளிட்ட ஓய்வு நேரங்களில், கம்பெனிகள், வீடுகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்து அதன் மூலம்சம்பாதிக்கிறார்.

இந்தப் பணத்தை ஆதரவற்றோர் விடுதிகள், கருணை இல்லங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாகவழங்கி வருகிறார். இன்று, நேற்றில்லை, பல பல ஆண்டுகளாக அவர் இந்தச் சேவையை சத்தமில்லாமல் செய்துவருகிறார்.

ஆனால், அமைதியாய் இருப்பதை விட செய்யும் சேவையை வெளியில் சொன்னால் மற்றவர்களை சிந்திக்கவைக்கும் என இவரது நண்பர்கள் எடுத்துக் கூறியதால் சமீபத்தில் தான் தனது இந்தச் சேவையை வெளியுலகுக்குத்தெரிய வைத்தார்.

சமீபத்தில் இது போல சேமித்த ரூ. 3,000 பணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகானந்தத்தை சந்தித்து ஏழை,எளியவர்களுக்கு உதவும் திட்டத்திற்காக இவர் கொடுத்தார்.

அவரது சேவை மனப்பான்மையை உணர்ந்த ஆட்சித் தலைவர் முருகானந்தம் அவரைக் கட்டித் தளுவிவெகுவாகப் பாராட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+