ரயில்களில் தீபாவளி நெரிசல்: பிக்பாக்கெட்டு ஆசாமிகள் மீது போலீஸ் கண்
சென்னை:
தீபாவளி பண்டிகையையொட்டி கடுமையான நெரிசல் இருப்பதால் ரயில்களில் பயணம் செல்லும் பயணிகளுக்குஅதிகபட்ச பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே பாதுகாப்புப் படை எஸ்.பியான ரவி கூறினார்.
தீபாவளியையொட்டி சென்னை எழும்பூர் ரயில் சந்திப்பு மற்றும் சென்டிரல் ரயில் நிலையங்களில் பயணிகள்கூட்டம் அலைமோதுகிறது.
இதையடுத்து அசம்பாவிதச் சம்பவங்கள், திருட்டுக்கள் ஆகியவை நடந்து விடாமல் தடுக்கும் பொருட்டு பலத்தபோலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரவி கூறுகையில்,
எழும்பூர் மற்றும் சென்டிரல் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சுமார் 5,000 போலீஸார்பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையங்களிலிருந்து கிளம்பும் ஒவ்வொரு ரயிலிலும் 10 போலீஸார்பாதுகாப்புக்காக அனுப்பப்படுகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிக்பாக்கெட் திருடர்கள், வழிப்பறித் திருடர்கள் என 100 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ரயில்களில் பயணிகள் பட்டாசுகள் போன்ற வெடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறி எடுத்துச் சென்றால் உடனடியாக அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார் ரவி.
எழும்பூர், சென்டிரல் ரயில் நிலையங்களில் ரகசிய கேமராக்கள் மூலம் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications