விழுப்புரம் பட்டாசு விபத்து: அரசின் அலட்சியமே காரணம்"
சென்னை:
விழுப்புரம் மாவட்டம் மிட்டாமண்டகப்பட்டு கிராமத்தில் 14 பேரின் உயிரை பலி கொண்ட பட்டாசு விபத்துக்குஅரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் சிறார் தொழிலாளர் ஒழிப்புப் பிரசார இயக்கம் சார்பில் இந்த விபத்து குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.ராதா என்பவரைத் தலைவராகக் கொண்ட குழு நடத்திய ஆய்வு முடிவுகள் குறித்து அமைப்பின் சென்னைஒருங்கிணைப்பாளர் ஒஸ்ஸி பெர்னாண்டஸ் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது: மிட்டாமண்டகப்பட்டு கிராமத்தில் விபத்துக்குள்ளான தொழிற்சாலையை நடத்தசெல்வமூர்த்தி என்பவருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
4 பேர் கொண்ட யூனிட்டாக மட்டுமே இதை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் 5 கிலோவெடிபொருட்களை மட்டுமே இருப்பு வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விபத்து நடந்தஅன்று 22 பேர் வேலை பார்த்துள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு வெடிபொருட்கள் குடிசைகளுக்குள் வைக்கப்பட்டிருந்தன. இதன்காரணமாகவே இத்தனை உயிர்கள் பலியாக நேரிட்டது.
மேலும் வெடிபொருள் சட்டப்படி கூறப்பட்டுள்ள ஒரு வழிமுறையும் இங்கு முறையாகக்கடைப்பிடிக்கப்படவில்லை. இதுகுறித்து அரசு அதிகாரிகள் யாரும் முறையாக சோதனை நடத்தவும் இல்லை.
இந்த அலட்சியப் போக்கு காரணமாகவே இவ்வளவு பெரிய விபத்து நடந்துள்ளது. விபத்தில் பலியானவர்களில் 8பேர் சிறுவர்கள் என்றார் அவர்.