ரயில் நிலையத்துக்கு குண்டு மிரட்டல்: அல்-உம்மா கைவரிசை?
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அங்குதீவிர சோதனை நடத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தின் ஸ்டேசன் மாஸ்டருக்கு வந்த கடிதத்தில்,
கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானியையும், பிற அல்-உம்மா கைதிகளையும் விடுவிக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ரயில் நிலையம் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்றுகூறப்பட்டிருந்தது.
மதானி மற்றும் பிறர் விடுவிக்கப்படாவிட்டால் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் குண்டுகள் வைக்கப்படும் என்றும் அதில்மிரட்டப்பட்டுள்ளது.
இதனால் ரயில்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications