இவர்களுக்கு இது கருப்பு தீபாவளியாம்!
சென்னை:
தீபாவளி போனஸ் பாக்கியை வழங்க வேண்டும், போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கக் கூடாது என்பதுஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கருப்பு தீபாவளிஅனுஷ்டிக்கின்றனர்.
இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் செளந்தரராஜன்வெளியிட்டுள்ள அறிக்கையில்,
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ரூ.7,000 வரை போனஸாக பெறத் தகுதி இருந்தும், அரசு வெறும் ரூ.3,500மட்டுமே வழங்கியுள்ளது. கடந்த ஆண்டும் இதேபோலவே குறைத்துக் கொடுத்தது. இதனால், பாக்கித் தொகைதற்போது ரூ. 7,000 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர விழாக்கால படியும் வழங்க அரசு மறுத்து விட்டது. தொடர்ந்து அரசினால் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்தொழிலாளர்கள்.
எனவே எங்களது எதிர்ப்பைக் காட்ட அனைத்து பஸ் டிப்போக்களிலும் திங்கள்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்துஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். கருப்பு பேட்ஜுடன் பணியாற்றுவார்கள் என்று கூறியுள்ளார்.