திமுகவின் மேம்பால ஊழல்: விசாரணைக் கமிஷன் அறிக்கை தாக்கல்
சென்னை:
சென்னை பெரம்பூர் பகுதியில் திமுக ஆட்சிக்காலத்தில் கட்ட உத்தரவிடப்பட்ட மேம்பாலப் பணிகளில்நடந்துள்ளதாகக் கூறப்படும் ஊழல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட கமிஷன் தனது அறிக்கையை அரசிடம்அளித்துள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அதில் பெரம்பூர்பாலம் முடிவடைவதற்குள் திமுக ஆட்சியை இழந்துவிட்டது.
ஆட்சியின் கடைசி காலத்தில் இருந்த திமுக இந்தப் பாலக் கட்டுமானப் பணியில் பெருமளவில் ஊழல் செய்ததாகஅதிமுக குற்றம் சாட்டி மேம்பாலப் பணிகளை நிறுத்தியது.
இந்த பால ஊழல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.இதில் மேலும் 2 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த கமிஷன் பெரம்பூர் பால பணிகள் குறித்துஆராய்ந்தது.
பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்கள், மேம்பாலக் கட்டுமானப் பணிகள், டெண்டர்கள், செலவான தொகை,செலவிடப்பட்ட முறை ஆகியவை குறித்த விவரங்களை இந்தக் கமிஷன் ஆராய்ந்து வந்தது.
தற்போது விசாரணைக் கமிஷனின் ஆய்வுகள் முடிந்து அறிக்கை தயாராகி விட்டது. இந்த அறிக்கையை கமிஷன்தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து சமர்பித்தனர்.
இதன் அடிப்படையில் இந்த வழக்கு தூசித் தட்டப்படலாம். அப்போது திமுகவினர் மீது அரசு நடவடிக்கையில்இறங்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications