அண்ணி, மாமியார் படுகொலை .. "சிங்கம்" தலைமறைவு
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தனது அண்ணி மற்றும் மாமியாரைக் கொலை செய்தார் வாலிபர்.
உசிலம்பட்டி அருகே உள்ளது நடுதலைக்குளம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பன் என்ற கருப்பையா.இவரது மனைவி மாதேவி. இருவருக்கும் இடையே 5 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்துவந்தனர்.
உக்கம்பட்டி என்ற கிராமத்தில் தனது தாயார் மணியம்மாளுடன், தனியாக வசித்து வந்தார் மாதேவி. உசிலம்பட்டிகோர்ட்டில் தனது கணவரிடம் இருந்து விவாகரத்தும் ஜீவனாம்சமும் கோரி மாதேவி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
சமீபத்தில் அந்த வழக்கில் மாதேவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கருப்பையாவுக்கு கோர்ட்டிஉத்தரவிட்டது. இதையடுத்து கருப்பையா குடும்பத்தினர் ஆத்திரமடைந்தனர்.
மாதேவியைத் தீர்த்துக் கட்ட கருப்பையாவின் தம்பி சிங்கம் முடிவு செய்தார்.
இதையடுத்து தனது நண்பர் ஒருவருடன் உக்கம்பட்டிக்குச் சென்றார். அங்கு தனது அண்ணி மாதேவியைசரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் மாதேவி அந்த இடத்திலேயே துடிதுடித்துப் பலியானார்.
அதைத் தடுக்க வந்த மணியம்மாளுக்கும் சரமாரியாக கத்திக் குத்து விழுந்தது. அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து உசிலம்பட்டி போலீஸார் கருப்பையா, அவரது தம்பி சிங்கம், தந்தை ராமுத் தேவர், தாயார் கருப்பாயிமற்றும் சிங்கத்தின் நண்பர் உள்ளிட்ட 5ல பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் சிங்கம் தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications