திருடுவது தூத்துக்குடியில் விற்பது சென்னையில்.. ஒரு ""ஜகஜால"" நகை மோசடி கும்பல் கைது
சென்னை:
தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர் அங்கிருந்து நகைகளைத் திருடிக் கொண்டு வந்து கொடுக்க, அதை சென்னையில்விற்று பணம் பார்த்து வந்த தாய், மகன் மற்றும் ஒருவர் அடங்கிய 3 பேர் கும்பலை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை இணை ஆணையர் சைலேந்திர பாபு கூறியதாவது:
பாரிமுனையில் உள்ள ஒரு நகைக் கடைக்கு சரோஜா என்ற நடுத்தர வயதுப் பெண் அடிக்கடி வந்து சென்றார்.வரும்போதெல்லாம் நகைகளைக் கொண்டு வந்து விற்றார். இது குறித்து உளவுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல்கிடைத்தது.
இதையடுத்து சரோஜாவை ரகசியமாக கண்காணித்தோம். சந்தேகம் உறுதிபடவே அவரது வீட்டில் திடீர் சோதனைநடத்தப்பட்டது.
அங்கு, ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்க நகைகள், ரூ. 30,000 பணம் ஆகியவை இருந்தன. இவ்வளவுநகைகள் வாங்கும் அளவுக்கு அவரிடம் வசதி ஏதும் இல்லை.
இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது அத்தனையும் திருட்டு நகைகள் என்று தெரிந்தது. இதையடுத்துசரோஜாவும் இதில் அவருக்கு உதவியாக இருந்து வந்த அவரது மகன் செல்வராஜும் கைது செய்யப்பட்டனர்.
இருவரிடம் நடத்திய விசாரணையின்போது தூத்துக்குடியில் இருந்து இந்த நகைகள் வந்தது தெரிந்தது.தூத்துக்குடியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் அங்கிருந்து நகைகளை திருடி இவர்களிடம் கொடுத்து வந்துள்ளார்.
அதை இவர்கள் விற்று பணம் பெற்று முருகேசனுக்கு சேர வேண்டிய தொகையை கொடுத்து விட்டு மீதி பணத்தைகமிஷனாக இவர்களே வைத்துக் கொண்டுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த மோசடித் தொழில் நடந்து வந்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஏ.வி.எம். நகைக் கடையில் முருகேசன் வேலை பார்த்து வருகிறார். தனது கடையில்இருந்தும் வெளியில் இருந்தும் போலியான ஆர்டர்களின் பேரில் நகையை வரவழைத்து அவற்றைத் திருடிசென்னைக்கு வந்து சரோஜாவிடம் கொடுத்து விற்று வந்துள்ளார்.
இப்படி நகைகளை விற்று கிடைத்த பணத்தில் தூத்துக்குடி பைபாஸ் சாலையில் ஒரு மிகப் பெரிய ஹோட்டலைக்கட்டியுள்ளார் முருகேசன். திருநெல்வேலியில் இடமும் வாங்கிப் போட்டுள்ளார்.
யாருக்கும் சந்தேகம் வந்துவிடாதபடி மிக லாவகமாக இந்த மோசடியை செய்து வந்துள்ளார் முருகேசன்.
திருட்டு நகைகள் விற்பது, வாங்குவதைக் கண்காணிக்க கமிஷனர் விஜயக்குமார் உத்தரவுப்படி சென்னை நகரில் 3ரகசிய போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு குழு தான் இதைக் கண்டுபிடித்தது என்றார்சைலேந்திர பாபு.
-->












Click it and Unblock the Notifications