சென்னைக்கு வந்த பறக்கும் கண் மருத்துவமனை!
சென்னை:
சகலவிதமான கண் மருத்துவ சிகிச்சை வசதிகளுடன் கூடிய பறக்கும் கண் மருத்துவமனையான ஆர்பிஸ் சர்வதேசகண் மருத்துவமனை விமானம் (Orbis) சென்னை வந்துள்ளது. 3 வாரங்களுக்கு இது சென்னையில் பொதுமக்களுக்கு சிகிச்சை தரும்.
1982ம் ஆண்டு இந்த பறக்கும் கண் மருத்துவமனை அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. வளரும் நாடுகளில் கண்நோய்களுக்கு சிகிச்சை தரும் உயரிய நோக்கத்தில் இந்த மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ந்து உலகின் பல்வேறு வளரும் நாடுகளுக்கும் இந்த விமான மருத்துவமனை சென்று சிகிச்சை அளித்துவருகிறது. இந்த பறக்கும் மருத்துவமனையில் 25 டாக்டர்கள் பணிபுரிகிறார்கள்.
இந்த பறக்கும் கண் மருத்துவமனை விமானம் சென்னை வந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் இது 3வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
சிகிச்சை அறை, ஆபரேஷன் அறை, டாக்டர்கள், நர்சுகள் அறை, டாக்டர்கள் அறை, பாடம் நடத்தும் வசதி,வீடியோ கான்பரன்சிங் அறை, லேசர் அறை, மாநாட்டுக் கூடம் ஆகியவை இதில் உள்ளன.
உலகின் பிற பகுதிகளுக்கும் போன், பேக்ஸ், இன்டர்நெட் மூலம் தொடர்பு கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.
இந்த விமானத்தின் மருத்துவ சேவையை தமிழக ஆளுனர் ராம் மோகன் ராவ் இன்று தொடங்கி வைக்கிறார்.உள்ளூர் டாக்டர்களுடன் சேர்ந்து இந்த மருத்துவமனை டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பார்கள்.
ஆண்டுதோறும் இந்த மருத்துவமனைக்காக ரூ. 120 கோடி செலவழிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் மானிய உதவி, அன்பளிப்புகள், நன்கொடைகள் மூலம் இந்த நிதிவசூலிக்கப்படுகிறது. இதுவரை 80 நாடுகளில் இந்த மருத்துவமனை சென்று சிகிச்சை அளித்துள்ளது.
நேரடியாக 23,000 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். தனது பல்வேறு திட்டங்கள் மூலம் 90 லட்சம் பேருக்குகண் பார்வையை சீர் செய்துள்ளது இந்த பறக்கும் மருத்துவமனை.
உலக சுகாதார மையம், சர்வதே கண்பார்வை இழப்பு தடுப்பு இயக்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்துஆர்பிஸ் செயல்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் யுனைட்டட் ஏர்லைன்ஸ் தான் இந்தத் திட்டத்துக்காக தனது டி.சி.-8 ரக விமானத்தை இலவசமாகஇந்த அமைப்புக்குத் தந்து உதவியது. பின்னர் அந்த விமானம் மாற்றப்பட்டது. இப்போது டி.சி- 10 ரகவிமானத்தில் இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
-->
-
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
Vijay: வதந்திகளுக்கு பதிலடி! ஷாலினியுடன் சங்கீதா.. அஜித் வீட்டில் விஜய்! லீக்கான வீடியோ -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
விஜய்கிட்ட ஒன்னுமேயில்லை..இன்னும் 10 வருஷம் போகட்டும்! அடம் பிடித்த ராகுலை கார்கே சமாளித்தது எப்படி? -
Vijay Trisha: ஜோடியாக வந்த விஜய் திரிஷா.. சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி.. ஒரே காரில் வந்து பங்கேற்பு -
சங்கீதா விஷயத்தை விட பெரிய சிக்கல்.. அவ்வளவு தூரம் வாக்குறுதி கொடுத்தீர்களே.. புலம்பி கொட்டிய விஜய் -
உலகின் முன்னணி சரக்கு கப்பல் நிறுவனம் வெளியிட்ட அலர்ட்! மொத்த உலகமும் ஸ்தம்பிக்கப்போகுது! -
ராஜ்யசபா எம்.பியாகும் அன்புமணி.. மிக இளம் வயது கேபினட் அமைச்சர் - அட்டெண்டென்ஸ் சர்ச்சை.. யார் இவர்? -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
மண்டமேல இருந்த கொண்டைய மறந்த ஓபிஎஸ்.. கேட்ல இருந்த இரட்டை இலைய எடுத்தீங்களே! வீடு? விளாசிய விந்தியா!












Click it and Unblock the Notifications