For Daily Alerts
Just In
புனித ரம்ஜான் நோன்பு தொடங்கியது
சென்னை:
தமிழகத்தில் வியாழக்கிழமை முதல் ரம்ஜான் நோன்புக் காலம் துவங்குவதாக தமிழக அரசின் தலைமைக் காஜியார்முப்தி காஜி சலாஹுதின் முகம்மது அயூப் அறிவித்துள்ளார்.
ரம்ஜான் மாதத்திற்குரிய முதல் பிறை எதிர்பார்த்தபடி செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் தெரியவில்லை.புதன்கிழமை இரவு தான் அது காணப்பட்டது.
எனவே இன்று முதல் (வியாழக்கிழமை) ரம்ஜான் நோன்பு துவங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்துஇன்று அதிகாலை முதல் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருக்க ஆரம்பித்துள்ளனர்.
ஒரு மாத காலம் அவர்கள் இந்த நோன்பை மேற்கொள்வார்கள். 30 நாட்கள் நோன்பு முடிந்த பின்னர் ரம்ஜான்பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுவார்கள்.
-->
Comments
Story first published: Thursday, November 7, 2002, 5:30 [IST]