சசிகலாவிடமும் விசாரணை
சென்னை:
டான்சி வழக்கில் சசிகலா தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை நடந்து வருகிறது.
அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை முதல்வர் ஜெயலலிதாவும் அவரது உடன் பிறவா சகோதரி சசிகலாவும்முறைகேடாக அபகரித்தனர்.
இதில் ஜெ மற்றும் சசிக்கு சிறப்பு நீதிமன்றத்தில் சிறை தண்டனை தண்டனை கிடைத்தது. ஆனால், உயர் நீதிமன்றம்ஜெயலலிதா, சசிகலாவை இந்த வழக்கில் இருந்து விடுவித்தது.
இந்த விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கில் தங்களுக்கு எதிரான தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதால் டான்சி நிலத்தை மீண்டும்ஒப்படைத்துவிடுவதாக ஜெயலலிதாவும் சசிகலாவும் கூறியுள்ளனர்.
ஆனால், இந்த நிலம் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றம் விடுவித்தால் தான் அதைசசிகலாவால் மீண்டும் அரசிடம் ஒப்படைக்க முடியும்.
எனவே, முடக்கப்பட்ட டான்சி நிலத்தை விடுவித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில்சென்னை தலைமை சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் இறுதியில் நடந்தபோது, நீதிபதி சிங்காரவேலன் சசிகலாவுக்கும் அரசுக்கும்சில கேள்விகளை எழுப்பியிருந்தார். மேலும் சசிகலா நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா கோர்ட்டில் ஆஜராக அவரது வக்கீல் காலஅவகாசம் கேட்டார். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமைக்கு (இன்று) விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
-->












Click it and Unblock the Notifications