தமிழகத்தில் மேலும் 961 பெண் சப்-- இன்ஸ்பெக்டர்கள்
சென்னை:
தமிழகத்தில் புதிதாக 961 பெண் சப் இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
புதிய பெண் சப் இன்ஸ்பெக்டர்கள் நியமனம் விரைவில் நடைபெறும் என்று சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாஅறிவித்திருந்தார். தற்போது அதற்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதன்படி 961 பெண் சப் இன்ஸ்பெக்டர்கள் நேரடித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் பணியில்இருக்கும் காவல்துறையினர் வாரிசுகளுக்கு 10 சதவீத இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுவீராங்கனைகளுக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்டதாரிகள் மட்டுமே இந்தத் தேர்வில் கலந்து காள்ளத் தகுதி உடையவர்கள்.
உடல் திறன் போட்டி (15 சதவீத மதிப்பெண்), எழுத்துத் தேர்வு (70 சதவீத மதிப்பெண்), நேர்முகத் தேர்வுக்கு 15சதவீத மதிப்பெண் வழங்கப்படும். என்.சி.சி வீராங்கனைகளுக்கு 15 சத மதிப்பெண் கூடுதலாகத் தரப்படும்.
டிசம்பர் 5ம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications