தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கடன் நிறுத்தம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த கல்வி கடன் தொகையைஇந்த ஆண்டு தமிழக அரசு தரவில்லை.

இதையடுத்து இந்தக் கடன் தொயைை தருமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரஜினி என்பவர் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். அதில்,

தமிழக அரசு வழக்கமாக தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு கல்விக் கடன் வசதியை(கடன் ஸ்காலர்ஷிப்)வழங்கி வந்தது. ஆனால் இந்த ஆண்டு அதற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப பாரத்தைக் கூடகல்லூரிகளிலும், பள்ளிகளிலும் அரசு வினியோகிக்கவில்லை.

எனவே, தமிழ்நாடு ஹரிஜன் நல கல்விக் கடன் ஸ்காலர்ஷிப் சட்டப்படி உடனடியாக கல்விக் கடன் வசதியைமாணவ, மாணவிகளுக்குத் தர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

நிதியில்லை என்று கூறி பல்வேறு உதவித் திட்டங்களில் அரசு கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அதிமுக காண்ட்ராக்டர்களிடம் மட்டும் எப்படித்தான் நிதி புழங்குகிறதோ தெரியவில்லை.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+