திருச்சியில் கண்டக்டர் இல்லாத பஸ்கள்
திருச்சி:
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தஞ்சாவூரிலிருந்து, திருச்சிக்கும் கும்பகோணத்திற்கும் இந்த பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சாதாரணகட்டணம் வசூலிக்கப்படும் இந்த பஸ்களில் கண்டக்டர்கள் இருக்க மாட்டார்கள்.
இந்த பஸ்களில் பயணம்செய்ய விரும்புவோர் தஞ்சை பஸ் நிலையத்திலேயே டிக்கெட் வாங்கிக்கொள்ளவேண்டும். அதன் பிறகு டிரைவரிடம் டிக்கெட்டைக் காட்டிவிட்டு பஸ்சில் ஏறி அமர்ந்தால் எங்குமே நிற்காமல்நேராக திருச்சிக்கும், கும்பகோணத்திற்கும் செல்லும்.
பயணக் கட்டணம், திருச்சிக்கு ரூ. 16. கும்பகோணத்திற்கு கட்டணம் ரூ. 15.
இதில் வீடியோ வசதியும் உண்டு.
இரு ஊர்களுக்கும் பயண நேரம் 1 மணி நேரம் மட்டுமே. தினசரி காலை 7.15 மணிக்கு இந்த பஸ்கள் திருச்சிக்கும்,கும்பகோணத்திற்கும் புறப்படும். இரவு 8 மணி வரை மொத்தம் 10 டிரிப்புகள் அடிக்கப்படும்.
சோதனைரீதியாக இந்த பஸ்கள் அறிகப்படுத்தப்பட்டுள்ளன. இத் திட்டத்துக்கு மக்களிடையே வரவேற்புஇருந்தால் மற்ற வழித்தடங்களிலும் இது போன்ற பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும்.
-->












Click it and Unblock the Notifications