ஜெ- பெர்னாண்டஸ் சந்திப்பு: வீரப்பன் குறித்து ஆலோசனை
சென்னை:
சென்னை வந்த பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டஸ் முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.
சுமார் 40 நிமிடங்கள் இச் சந்திப்பு நீடித்தது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என பெர்னாண்டஸ் கூறினார்.
ஜெயலலிதாவை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இழுக்கும் முயற்சியாக இச் சந்திப்பு நடந்ததா என்றுகேட்டபோது, அப்படி எல்லாம் இல்லை என பதிலளித்தார்.
பின்னர் அங்கிருந்து நேராக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற ஜார்ஜ் பெர்னாண்டஸ், அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள மத்தியஅமைச்சர் முரசொலி மாறனின் உடல் நிலை குறித்து விசாரித்தார். அப்போது அங்கிருந்த திமுக தலைவர் கருணாநிதியையும் பெர்னாண்டஸ்சந்தித்துப் பேசினார்.
வீரப்பன் குறித்து பேச்சு:
முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவுடன் வீரப்பன் விவகாரம் குறித்து பெர்னாண்டஸ் பேசியதாகத் தெரிகிறது. வீரப்பனிடம் இருந்துநாகப்பாவை மீட்க பெர்னாண்டசின் உதவியை கர்நாடகம் கோரியுள்ளது. இது தொடர்பாக அவர் ஜெயலலிதாவிடம் பேசியதாகத்தெரிகிறது.
அதே நேரத்தில் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழக அதிரடிப்படையின் தேடுதல் வேட்டை தொடர்ந்துகொணடிருப்பதாகக் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை விவரம்:
கர்நாடகத்துடன் இணைந்து வீரப்பன் தேடுதல் வேட்டை நடத்துவதை தமுழக அதிரடிப்படை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பேநிறுத்திவிட்டது. இப்போது நமது படையின் தேடுதல் வேட்டை தமிழக காட்டுப் பகுதியில் மட்டுமே தொடர்ந்து நடந்து வருகிறது.
வீரப்பனிடம் கொளத்தூர் மணியை தூதராக அனுப்ப முயற்சி செய்வதாக நாகப்பாவின் மனைவியிடம் நான் எந்த உறுதிமொழயையும்தரவில்லை.
நாகப்பாவை மீட்க தமிழக அரசிடம் கர்நாடகம் இதுவரை எந்த உதவியும் கோரவில்லை. உதவி கேட்டால் அதை தமிழகம் வழங்கும் என்றுஅறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மணியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு:
இதற்கிடையே ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கொளத்தூர் மணி தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையை நீதிமன்றம்வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டது.
மணி மீது கர்நாடகத்தில் 5 வழக்குகள் உள்ளன. இதனால் அவர் கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தடா வழக்கில் மைசூர் நீதிமன்றத்திடம் ஜாமீன் கிடைத்துள்ளது. இரு வழக்குகள் உயர் நீதிமன்றத்திலும் மேலும் 2 வழக்குகள் பிறநீதிமன்றங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
கொளத்தூர் மணி அல்லது அமைச்சர் ராஜூ கெளடாவை அனுப்பினால் தான் நாகப்பாவை விடுவிப்பது குறித்து பேசுவேன் என்றுவீரப்பன் கூறியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரை அனுப்ப முடியாது என கர்நாடகம் ஏற்கனவே கூறிவிட்டது.
-->
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications