பட்டாசை கடித்த பசு மாடு வெடித்து சிதறியது
சென்னை:
சென்னை அருகே மடிப்பாக்கம் என்ற இடத்தில் பாலிதீன் பாக்கெட்டில் கிடந்த பட்டாசை சாப்பிட்ட பசு மாடு உடல்சிதறி பலியானது.
மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தெருவில் பசு மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது தரையில்கிடந்த ஒரு பாலிதீன் பாக்கெட்டை அந்த மாடு சாப்பிட்டது.
அதில் வெங்காய வெடி கிடந்துள்ளதாகத் தெரிகிறது. அந்த வெடியை மாடு கடித்த போது பயங்கர சப்தத்துடன்பாக்கெட் வெடித்தது.
இதில் அந்த மாட்டின் தலை துண்டாகி அடுத்த தெருவில் விழுந்தது. மாடும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிபலியானது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெடிகுண்டு தான் வெடித்து விட்டதோ எனபொதுமக்கள் கருதினர். அந்த அளவுக்குப் பயங்கர வெடிச் சத்தம் எழுந்தது.
சமீபத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போலீஸ் நிழற்குடை மர்மமான முறையில் வெடித்து சிதறியது. தற்போதுபசு மாடும் வெடித்துச் சிதறி இறந்ததால் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
-->