For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரதட்சணை கேட்டு பெண் கொலை: கணவருக்கு கிராம மக்கள் "தர்ம" அடி

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

வந்தவாசியில் வரதட்சணைக் கேட்டு மனைவியைக் கொலை செய்தவரையும் அவருடைய பெற்றோரையும் கிராமமக்கள் ஒன்று திரண்டு சரமாரியாக அடித்து உதைத்தனர்.

வந்தவாசியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கோமதி. கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமணம்நடந்தது.

தலை தீபாவளியையொட்டி சீர்வரிசையாக 4 பவுன் நகை மற்றும் ரூ.10,000 பணம் ஆகியவற்றை பிறந்தவீட்டிலிருந்து பெற்று வருமாறு கூறி கோமதியை தாய் வீட்டுக்கு அனுப்பினார் குமார்.

ஆனால் குமார் கூறிய அளவுக்கு பணம் பெற்று வராமல் குறைந்த அளவிலான பணத்தையே பெற்றோர்வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்தார் கோமதி.

இதனால் ஆத்திரமடைந்த குமாரும், அவரது பெற்றோரும் கோமதியை சித்திரவதைப்படுத்தியுள்ளதாகத்தெரிகிறது. இதில் கோமதி இறந்து விட்டார்.

மகள் இறந்த தகவல் தெரிந்ததும் அவரது பெற்றோர் விரைந்து வந்தனர். ஆனால் கோமதியின் உடலைப் பார்க்ககுமார் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து கிராம மக்கள் கொதித்தெழுந்தனர். கிராமமே ஒன்று கூடி குமாரின் வீட்டுக்குள் புகுந்து அவரையும்அவருடைய பெற்றோரையும் அடித்து உதைத்தது.

போலீஸாருக்குத் தகவல் போகவே அவர்கள் உடனடியாக விரைந்து வந்து கோமதியின் பிணத்தை மீட்டனர்.பின்னர் குமாரும், அவருடைய பெற்றோரும் கைது செய்யப்பட்டனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X