மழையால் ஒத்தி வைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் நவம்பர் 14ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி ஆரம்பமாக உள்ளது.
7ம் தேதி துவங்குவதாக இருந்த வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி, மழை காரணமாக 14ம் தேதிக்குதள்ளிவைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தல் தொடர்பாக 16,17,23,24 ஆகிய தேதிகளில் சிறப்புப் பிரசாரங்கள் நடத்தப்படும்.வரைவு வாக்காளர் பட்டியல் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் 14ம் தேதி வெளியிடப்படும்.
அதன் பிறகு அதில் தங்கள் பெயரை சேர்க்க வேண்டும் அல்லது பெயர், முகவரியில் திருத்தம் செய்ய வேண்டும்என்று நினைப்பவர்கள் டிசம்பர் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதையடுத்து வரும் ஜனவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
தமிழகத்தில் இதுவரை 66 சதவீத வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வினியோகிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications