அசுத்த நீர் பருகிய 3 பேர் பலி: கிராமமே பாதிப்பு
அரியலூர்:
அசுத்த நீர் அருந்தியதால் ஜெயங்கொண்டம் பகுதியில் 3 பேர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இறந்தனர். மேலும் ஒருகிராமமே கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
ஜெயங்கொண்டம் மாதாபுரம் கிராம மக்கள் அங்குள்ள கண்மாய் நீரைத் தான் குடிக்கவும் சமையலுக்கும்பயன்படுத்தி வருகின்றனர்.
நேற்று இந்த நீரைப் பருகிய அனைவருக்கும் வாந்தி ஏற்பட்டது. தொடர்ந்து வயிற்றுப் போக்கும் உண்டானது.இதனால் அப் பகுதி முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கூட்டம் கூட்டமாக அழைத்து வரப்பட்டனர்.
ஆனால், இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். மற்றவர்களுக்கு தீவிரமான சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்ய பகுதியில் அசுத்தமடைந்த குடிநீரைக் குடித்ததால் அங்குவயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 50க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கண்மாய் நிரம்பி வழிகிறது. கண்மாய்க்கு மழை நீர் வந்தபோதுவழியில் தண்ணீர் அசுத்தமடைந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
அந்த கிராமத்தில் டேங்க் கட்டப்பட்டு குழாய்களும் போடப்பட்டுள்ளன. ஆனால், அந்த நீர் அதிகஉப்புத்தன்மையுடன் இருப்பதால் மக்கள் தொடர்ந்து கண்மாய் நீரையே பருகி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாதாபுரம் கிராமத்திற்கு மருத்துவக் குழுக்கள் விரைந்துள்ளன.
-->












Click it and Unblock the Notifications