ஒயின் கடையில் ஜெனரேட்டர் புகை தாக்கி 2 ஊழியர்கள் பலி
மதுரை:
ஒயின் கடையில் வேலை பார்த்து வந்த 2 பேர் கடைக்குள்ளேயே பிணமாகக் கிடந்தனர். ஜெனரேட்டரை நிறுத்தும்போது அதிலிருந்து வந்த புகை தாக்கி அவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி பகுதியில் உள்ள ஒயின்ஷாப்பில், வேலைபார்த்து வந்த 2 பேர் அங்கேயேதூங்குவது வழக்கமாம். கடந்த புதன்கிழமை இரவும் அதேபோல பணியை முடித்து விட்டு தூங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் கடை திறக்கப்படாமல் இருந்தது கண்டு போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டுஅவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்துத் திறந்தனர்.
அப்போது 2 பேரும் பிணமாக கிடந்தது தெரிய வந்தத. இரவில் ஜெனரேட்டரை நிறுத்தும் போது அதிலிருந்துவந்த புகையில் மூச்சுத் திணறி இருவரும் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கடைக்குள் ஒரு சாப்பாட்டுப் பொட்டலும், இறந்த எலியும் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் மேலும் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.
-->