ஆளற்ற லெவல் கிராசிங்கில் ரயில் மோதி 3 நேபாள கூர்க்காக்கள் பலி

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே ஆளற்ற லெவல் கிராசிங்கைக் கடக்க முயன்ற 3 நேபாள கூர்க்காக்கள் அப்பக்கமாக வந்தரயில் மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் புளியாடியில் தென் மாவட்டங்களில் பணி புரியும் கூர்க்காக்களுக்கான மாநாடுநடந்தது. இதில் நூற்றுக்கணக்கான நேபாள கூர்க்காக்கள் கலந்து கொண்டனர்.

அவர்களில் மூன்று பேர் புளியாடியில் உள்ள ஒரு ஆளற்ற லெவல் கிராசிங்கைக் கடந்து செல்ல முயற்சித்தனர்.

அப்போது அந்த வழியாகப் படுவேகத்துடன் வந்து கொண்டிருந்த நாகர்கோவில்-திருவனந்தபுரம் பேசஞ்ஜர் ரயில்அந்த கூர்க்காக்கள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த மோசமான சம்பவத்தில் அந்த மூன்று கூர்க்காக்களுமே ரயில் சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இது தொடர்பாக புளியாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+