கலாமுக்கு 815 அடி நீள "குழந்தைகள் தின" வாழ்த்து அட்டை
ஆண்டிப்பட்டி::
குழந்தைகள் தினத்தையொட்டி ஆண்டிப்பட்டி பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாமுக்கு 815 அடி நீள வாழ்த்து அட்டை ஒன்றை அனுப்பவுள்ளனர்.
ஆண்டிப்பட்டி எஸ்.கே.ஏ. மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தங்களுடைய கனவுகளையும்எதிர்கால லட்சியங்களையும் கவிதை, பாடல், கட்டுரை வடிவமாக அந்த வாழ்த்து அட்டையில் வடித்துள்ளனர்.
மாணவர்களின் இந்தப் பிரம்மாண்டமான வாழ்த்து அட்டை நாளை பதிவுத் தபால் மூலம் டாக்டர் கலாமுக்குஅனுப்பி வைக்கப்படும் என்று அந்தப் பள்ளியின் அதிபர் வஜ்ரவேலு தெரிவித்தார்.
கலாமுடன் கொண்டாடும் 12 தமிழ் குழந்தைகள்:
இதற்கிடையே கலாமுடன் குழந்தைகள் தின விழா கொண்டாட தமிழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்களும் 6மாணவிகளும் ரயில் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதி ஆண்டு தோறும் குழந்தைகள்தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவை பள்ளி மாணவர்களோடு கொண்டாட டாக்டர் கலாம் முடிவெடுத்துள்ளார். ஒவ்வொருமாநிலத்திலிருந்தும் 12 மாணவ-மாணவிகள் டெல்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார் அவர்.
அதன்படி தமிழகத்திலிருந்து ஆறு மாணவர்களும், ஆறு மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டனர். நேற்று இரவுஅவர்கள் சென்னையிலிருந்து ரயில் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
-->