பிரதமருடன் நாகப்பா குடும்பத்தினர் சந்திப்பு
டெல்லி:
வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் குடும்பத்தினர் இன்றுடெல்லியில் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து நாகப்பாவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுவற்புறுத்தினர்.
நாகப்பா காட்டுக்குள் கடத்தப்பட்டு 78 நாட்கள் ஆகியும் கூட அவரை மீட்பதற்கான நடவடிக்கையில்எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை.
கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரைச் சந்தித்தும் நாகப்பாவின் குடும்பத்தினர்முறையிட்டுப் பார்த்து விட்டனர். ஆனாலும் வீரப்பனிடம் தூதர்களை அனுப்புவதற்கான முயற்சிகளும் இன்னும்தொடங்கவில்லை.
இந்நிலையில் வாஜ்பாயை இன்று காலை நாகப்பாவின் மனைவி பரிமளா, மகன் ப்ரீதம் மற்றும் மருமகன் கிரன்பாட்டீல் ஆகியோர் சந்தித்தனர்.
இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாகத் தலையிட்டு நாகப்பாவை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் அப்போது கேட்டுக் கொண்டனர்.
தமிழக, கர்நாடக முதல்வர்களைத் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரிப்பதாக வாஜ்பாயும் அவர்களிடம் உறுதிஅளித்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய நாகப்பாவின் குடும்பத்தினர், இவ்விவகாரத்தில் தமிழக-கர்நாடக அரசுகள்இணைந்து செயல்படத் தவறி விட்டன என்று குற்றம் சாட்டினர்.
கர்நாடகாவில் எதிர்க் கட்சிகள் தர்ணா:
இதற்கிடையே நாகப்பாவை விரைவில் மீட்க கர்நாடக அரசை வலியுறுத்தி அம்மானில எதிர்க் கட்சிகளானபாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் இன்று பெங்களூரில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
ஜெயலலிதாவுடன் கிருஷ்ணா விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி நாகப்பாவை வீரப்பனிடமிருந்துவிடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
-->












Click it and Unblock the Notifications