சேலம் சிறையில் கைதிகளிடையே பயங்கர மோதல்: 16 பேர் மண்டை உடைந்தது
சேலம்:
சேலம் மத்திய சிறையில் கைதிகள் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் 16 கைதிகளின் மண்டை உடைந்துரத்தம் கொட்டியது.
சமீபத்தில் அன்புச் செல்வன் என்ற கைதியைப் பார்க்க வந்த அவரது வக்கீல் மற்றும் பெண் உறவினர் ஆகியோரைப்பற்றி ராஜு என்பவர் காமெண்ட் அடித்தார்.
இதுகுறித்து ராஜுவின் சகாவான மணிகண்டனிடம் அன்புச் செல்வன் புகார் கூறினார். ஆனால் இதை மணிகண்டன்கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. இது மோதலாக மாறவே மணிகண்டன்கோஷ்டியினரை அன்புச் செல்வனின் ஆதரவு கைதிகள் செங்கற்களால் பயங்கரமாகத் தாக்கினர். இதில்மணிகண்டனுடன் ராஜ்குமார் என்ற கைதியும் காயமடைந்தார்.
இதையடுத்து மோதல் தீவிரமானது. உருட்டுக் கட்டை, சவுக்குக் கட்டை, செங்கல் போன்றவற்றால் கைதிகள்ஒருவரை ஒருவர் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர்.
தாங்கள் சாப்பிடும் அலுமினியத் தட்டுகளை இரண்டாக உடைத்து அவற்றைக் கொண்டும் கைதிகள் தாக்கினர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த சிறைக் காவலர்கள் கைதிகள் மோதலைத் தடுக்க முனைந்தனர். ஆனால்அவர்களையும் மீறி பயங்கர சத்தத்துடன் கைதிகள் மோதிக் கொண்டதால் சேலம் சிறை போர்க்களம் போல்மாறியது.
இந்தத் தாக்குதல்களில் அன்புச் செல்வன் உள்ளிட்ட மேலும் 14 பேருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து சிறைக் காவலர்கள் அதிரடியாகச் செயல்பட்டு, லேசான தடியடி நடத்தி கைதிகளை அவரவர்அறைக்குள் தள்ளிப் பூட்டினர்.
காயமடைந்த 16 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறையிலிருந்து தப்பிக்கும் நோக்கத்துடனே கைதிகள் தங்களுக்குள் மோதிக் கொள்வது போல் நடித்துள்ளதாகவும்கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறைக்குள் ஆயுதமேந்திய போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications