திருவண்ணாமலை கோவில் விவகாரம்: மத்திய அரசுக்கு மதிமுகவும் எதிர்ப்பு
சென்னை:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலை மத்திய தொல்பொருள் துறை கையகப்படுத்துவதற்கு மதிமுககண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மதிமுக அவைத் தலைவர் எல். கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவில் நிர்வாகத்தை எடுத்துக் கொள்வதற்கு மத்திய தொல்பொருள் துறை கூறும் காரணங்களை ஏற்க முடியாது.
ஏற்கனவே தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் சிலையைப் புதுப்பித்து நிறுவ தொல்பொருள் துறைமறுத்து விட்டது.
இது போன்ற முன் அனுபவங்களைப் பார்த்தால் திருவண்ணாமலை கோவிலுக்கும் அதே நிலை தான் ஏற்படும்என்று நினைக்கத் தோன்றுகிறது.
எனவே இந்தக் கோவிலை மத்திய தொல்பொருள் துறை கையகப்படுத்தும் முடிவை ஏற்க முடியாது என்றுஅவ்வறிக்கையில் கூறியுள்ளார் அவர்.
இவ்விவகாரத்தில் சமீபத்தில் தான் திமுக தலைவர் கருணாநிதியும் மத்திய தொல்பொருள் துறையின்நடவடிக்கைகளை எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் மதிமுகவும் திருவண்ணாமலை கோவிலை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்பொருள்துறை கையகப்படுத்துவதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
திமுக, மதிமுக ஆகிய இரு கட்சிகளுமே மத்திய அரசின் தேசிய ஜனநாயக் கூட்டணியில் உள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->