For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பழனி அருகே பஸ்-லாரி பயங்கர மோதல்: 4 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

பழனி:

பழனி அருகே இன்று அதிகாலை நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியதில் 4பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பழனியிலிருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

இன்று அதிகாலை சுமார் 2 மணிக்கு முத்தாலம்பட்டி அருகே சாலையோரமாக நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீதுஅரசு பஸ் பயங்கரமாக மோதியது.

இதில் பஸ்சில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 17 பேர்காயமடைந்தனர்.

இவ்விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X