For Daily Alerts
Just In
பழனி அருகே பஸ்-லாரி பயங்கர மோதல்: 4 பேர் பலி
பழனி:
பழனி அருகே இன்று அதிகாலை நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியதில் 4பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பழனியிலிருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இன்று அதிகாலை சுமார் 2 மணிக்கு முத்தாலம்பட்டி அருகே சாலையோரமாக நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீதுஅரசு பஸ் பயங்கரமாக மோதியது.
இதில் பஸ்சில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 17 பேர்காயமடைந்தனர்.
இவ்விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
Story first published: Thursday, November 14, 2002, 5:30 [IST]