அமைதிக்காக அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம்: கலாம்
டெல்லி:
இந்தியாவின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டால் அணு ஆயுதங்களைப்பயன்படுத்துவதற்குத் தயங்க மாட்டோம் என்று ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறினார்.
நாடெங்கிலும் இருந்து வந்திருந்த சுமார் 100 மாணவ-மாணவிகளுடன் இன்று குழந்தைகள் தின விழாவை டாக்டர்கலாம் டெல்லியில் உற்சாகத்துடன் கொண்டாடினார்.
அப்போது வழக்கம் போல மாணவ-மாணவிகளைக் கேள்விகள் கேட்கச் செய்தார் டாக்டர் கலாம்.
அதன்படி "அணு ஆயுதங்களை அமைதி வழியில் எப்படிப் பயன்படுத்த முடியும்?" என்று ஒரு மாணவன் கேட்டகேள்விக்கு டாக்டர் கலாம் பதிலளிக்கையில்,
இந்தியா எப்போதும் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தாது என்பதை ஏற்கனவே பல முறை கூறிவந்துள்ளோம்.
ஆனால் நம் நாட்டின் அமைதிக்கோ, பாதுகாப்புக்கோ ஆபத்து என்று வந்து விட்டால் அணு ஆயுதங்களை நிச்சயம்பயன்படுத்துவோம்.
பெரும்பாலான நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. ஆனாலும் நம்முடைய இரு அண்டை நாடுகள் அணுஆயுதங்களை வைத்திருப்பதால் தான், பாதுகாப்புக்காக நாமும் அவற்றைத் தயாரித்து வைத்திருக்க வேண்டியநிலையில் உள்ளோம் என்றார் டாக்டர் கலாம்.
எப்போதும் போலவே மாணவ-மாணவிகளுடன் படு உற்சாகத்துடன் டாக்டர் கலாம் பேசிக் கொண்டிருந்தார்.அவர்களையும் பேச வைத்தார். கேள்விகளைக் கேட்கவும் வைத்தார்.
ஜனாதிபதியான பின்னர் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று வந்ததைக் குறிப்பிட்ட டாக்டர் கலாம், நாட்டிலுள்ளமாணவ-மாணவிகளும் தெளிவாகச் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் போதும், இந்தியா விரைவில் வல்லரசாகி விடும்என்றார். இன்றுடன் ஒரு லட்சம் மாணவ-மாணவிகளைச் சந்தித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
"இந்தியாவில் படித்த பலரும் படித்து முடித்தவுடன் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று விடுகிறார்களே.இதனால் இந்தியாவிற்குத் தானே நஷ்டம்?" என்று ஒரு மாணவன் கேட்ட கேள்வியை "வெகு அற்புதம்" என்றுபாராட்டினார் டாக்டர் கலாம்.
மேலும் அவனுக்குப் பதிலளிக்கையில், "இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான என்ஜினியர்களும்,விஞ்ஞானிகளும் உருவாகிக் கொண்டே உள்ளனர்.
இதனால் வெளிநாடுகளுக்குச் செல்லும் சில ஆயிரம் பேரால் இந்தியாவிற்குப் பாதிப்பு ஒன்றும் ஏற்பட்டு விடாது.
மேலும் அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதிலும் தவறேதும் கிடையாது. அந்த உரிமை அவர்களுக்கு உண்டுஎன்று பதிலளித்தார் டாக்டர் கலாம்.
அறிவியல், ஆன்மீகம் முதல் அரசியல், நதிகள் இணைப்பு வரை மாணவ-மாணவிகள் கேட்டகேள்விகளுக்கெல்லாம் சற்றும் சளைக்காமல் பதிலளித்து அவர்களையும் பார்வையாளர்களையும் டாக்டர் கலாம்திணறடித்தார்.
டாக்டர் கலாம் பேசும் போது அவருடைய பேச்சைக் குறிப்பெடுத்துக் கொள்ள மாணவ-மாணவிகள் முயற்சித்தபோது, "அதெல்லாம் வேண்டாம். என்னுடைய பேச்சுக்கள் அனைத்தும் www.presidentofindia.nic.in என்றவெப்சைட்டில் எப்போதும் இருக்கும். தேடி எடுத்துப் படித்துக் கொள்ளுங்கள்" என்றார் அவர்.
-->
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications