மேட்டூரில் நீர் மின்சார உற்பத்தி தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மேட்டூர் நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
மேட்டூர் நீர் மின் உற்பத்தி நிலையத்தில் தற்போது மொத்தம்100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன் மின் உற்பத்திக்குத் தேவையான அளவு தண்ணீர் கிடைக்காத காரணத்தால் மின்உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
மேட்டூர் அணையில் 50 அடிக்கும் மேல் தண்ணீர் இருப்பு இருந்தால் தான் இங்கு மின்சாரம் உற்பத்திசெய்யடியும்.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த கன மழையைத் தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயரத்தொடங்கியது.
இதையடுத்து தற்போது மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணையில் 67.72 அடி நீர் உள்ளது.
-->












Click it and Unblock the Notifications