For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாகப்பா கடத்தல்: ஜெயாவை சந்திக்க கர்நாடக அமைச்சர்கள் ரெடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா மீட்பு விவகாரம் தொடர்பாகமுதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க 2 அமைச்சர்கள் சென்னை வரத் தயாராக உள்ளதாக கர்நாடக அரசு கடிதம்அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக ஜெயலலிதாவுக்கு கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் ரவீந்திரா எழுதியுள்ள கடிதத்தில்,

நாகப்பா மீட்பு தொடர்பாக தங்களிடம் பேச கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கல்விஅமைச்சர் சந்திரசேகர் ஆகியோரை சென்னைக்கு அனுப்ப கர்நாடக அரசு தயாராக உள்ளது.

எனவே தங்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் ரவீந்திரா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய கார்கேயும் இந்தத் தகவலை உறுதி செய்தார். கர்நாடகமுதல்வர் கிருஷ்ணா தலைமையில் இன்று காலை கூடிய உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவுஎடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நாகப்பா கடத்தல் விவகாரம் குறித்து இதுவரை தமிழக அரசிடம் கர்நாடக அரசு ஒரு தகவலும் தெரிவிக்கவில்லைஎன்று நேற்று தான் நிருபர்களிடம் கூறியிருந்தார் ஜெயலலிதா. கர்நாடக அரசு கேட்டுக் கொண்டால் நாகப்பாவைவிடுவிப்பதற்கு தமிழக அரசு உதவத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயாவை சந்தித்த கர்நாடக காவல் அதிகாரி:

இந்நிலையில் கர்நாடக அதிரடிப்படையின் முன்னாள் தலைவரான சங்கர் பித்ரி இன்று காலை ஜெயலலிதாவைகோட்டையில் சந்தித்தார்.

தனது மகளின் திருமண அழைப்பை ஜெயலலிதாவிடம் கொடுத்து திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

பித்ரி-முதல்வர் சந்திப்பின்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரும் உடன் இருந்தார்.

48 Aݨ۵ݠݦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X