தலித்துகளுக்கு எதிரானவரா?: இல்லை என்கிறார் சங்கராச்சாரியார்
திருநெல்வேலி:
தலித் மக்களுக்கு எதிராக நான் செயல்படவில்லை. பத்திரிக்கைகளும், அரசியல்வாதிகளும்தான் அப்படி கூறிவருகிறார்கள் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.
நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு வருகை தந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,நான் தலித் மக்களுக்கு எதிரானவன் அல்ல. அவர்களும் நம்மைப் போன்றவர்கள் தான், நம்மவர்கள்தான்.
இந்திய நாட்டில் உள்ள எந்தக் கோவிலுக்குள்ளும் அவர்கள் தாராளமாக போகலாம், வரலாம், கடவுளைவணங்கலாம். எந்தக் கட்சி சார்பின்றியும், அமைப்பு சார்பின்றியும் அவர்கள் கோவிலுக்கு வருவதை யாரும் தடைசெய்ய முடியாது.
அனைத்துப் பிரிவினரையும் ஒரே சமுதாயத்தின் கீழ் கொண்டு வரவே நான் பாடுபடுகிறேன். எனது தற்காலநடவடிக்கைகள் அனைத்துமே சமூக சீர்திருத்த செயல்கள்தான், இதில் துளியும் அரசியல் இல்லை.
இந்துக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்காக கையில் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று அல்ல.அன்னிய கலாச்சார ஊடுறுவல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதில்தவறில்லையே.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நெல்லை டவுன் பகுதியில் உள்ள அருந்ததியர் காலனியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலுக்கும்ஜெயேந்திரர் போனார்.












Click it and Unblock the Notifications