தர்மபுரியில் கார்த்திகை விளக்குகள் தயாரிப்பு தீவிரம்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியில், கார்த்திகை தீப அகல் விளக்குகள் செய்யும் பணி தீவிரமாகநடந்து வருகிறது.
கார்த்திகை மாதம் வருகிற ஞாயிற்றுக்கிழமை பிறக்கிறது. இதையொட்டி வீடுகளில் கார்த்திகை தீப அகல் விளக்குள்ஏற்றி மக்கள் கார்த்திகை மாதத்தை கொண்டாடுவார்கள். இதையொட்டி தமிழகம் முழுவதிலும் அகல் விளக்குகள்செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பல பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டாலும் அதியமான்கோட்டையில் தயாரிக்கப்படும்விளக்குகளுக்கு வரலாற்றுப் பின்னணி உண்டு. இந்த ஊர் விளக்குகளை மக்கள் விரும்பி வாங்குவதும் வழக்கம்.
மன்னன் அதியமான் காலத்திலிருந்து இந்த அகல் விளக்குகளை தயாரித்து வரும் பரம்பரையைச் சேர்ந்தகுயவர்கள்தான் இங்கு விளக்குகளை தயாரித்து வருகின்றனர்.
அதியமான் கோட்டையிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள மோனையன் குட்டை என்ற ஏரியிலிருந்து மண் எடுத்துவந்து அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications