பொடாவும், வைகோவும்: இளங்கோவன் நக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொடா சட்டத்தை தீவிரமாக ஆதரித்துப் பேசிய மதிமுக பொதுச் செயலாளரான வைகோ, அதே சட்டத்தால் கைதுசெய்யப்பட்டுள்ளதால் அந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறுவதிலிருந்தே அவரதுமுரண்பாடு தெளிவாகத் தெரிகிறது என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் இன்று அவர் பேசுகையில்,

பதவியில் நீடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளதிராவிடக் கட்சிகள் கண்மூடித்தனமாக பா.ஜ.கவை ஆதரித்து வந்தன.

ஆனால் அவர்களாகவே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் போக்கைப் புரிந்து கொண்டு கூட்டணியை விட்டுவெளியே வந்து கொண்டிருக்கின்றன.

வைகோவும் அதே போல்தான், பொடா சட்டத்தை தீவிரமாக ஆதரித்து நாடாளுமன்றத்தில் பேசினார்.

ஆனால் இப்போது அதே பொடா சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளதால், அந்தச் சட்டத்தை மறுபரிசீலனைசெய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

இதிலிருந்தே அவரது முரண்பாடு தெளிவாகத் தெரிகிறது.

தமிழக காங்கிரஸ் நிர்வாககள் பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தப் பட்டியலுடன் நானும், தலைவர் சோ.பாலகிருஷ்ணனும் இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லி சென்று கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன்ஆலோசனை நடத்தி பட்டியலை இறுதி செய்வோம்.

அனேகமாக இந்த வார இறுதிக்குள் நிர்வாகிகள் பட்டியல் வெளியாகி விடும். நிர்வாகிகள் தேர்வு தொடர்பாகஎனக்கும், சோ.பாவுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை.

சாத்தான்குளம் இடைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சோ.பா. பேசிவருகிறார். விரைவில் இதுதொடர்பாகவும் முடிவு எடுக்கப்படும் என்றார் இளங்கோவன்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+