அதிமுகவின் இப்தார் விருந்து ரத்து: ஜெ. அறிவிப்பு
சென்னை:
அதிமுக சார்பில் ரம்ஜான் மாதத்தில் தரப்படும் இப்தார் விருந்து நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளதாக முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
காவிரியில் உரிய நீர் வராததாலும், கடுமையான வறட்சி காரணமாகவும் காவிரி டெல்டாப் பகுதியில் விவசாயிகள்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அது தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வறட்சியின் கொடுமை கடுமையாகத் தாண்டவமாடியுள்ளது.
இதன் காரணமாக இந்த ஆண்டு ரமலான் விருந்தான இப்தார் விருந்து நிகழ்ச்சியை அதிமுக ரத்து செய்துள்ளது.இதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.
இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் என்று ஜெயலலிதா அவ்வறிக்கையில்தெரிவித்துள்ளார்.
கட்டாய மதமாற்ற எதிர்ப்புச் சட்டம் காரணமாக இஸ்லாமிய மக்களிடையே நிலவி வரும் அதிருப்தி காரணமாகவேஅதிமுக சார்பிலான இப்தார் விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-->