பிற மாநிலங்களால் விரும்பப்படும் தமிழக வேட்டி, சேலைகள்
நாகர்கோவில்:
தமிழக அரசின் மலிவு விலை வேட்டி, சேலை விற்பனை ரூ. 12.75 கோடியைத் தொட்டுள்ளதாக ஜவுளித்துறைஅமைச்சர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தமிழக அரசின் மலிவு விலை வேட்டி, சேலைக்குதமிழகத்தில் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் நல்ல வரவேற்புகிடைத்துள்ளது.
ரூ. 12.75 கோடிக்கு இந்த வேட்டி, சேலை விற்பனை நடந்துள்ளது. இதனால் 27,000 நெசவாளர் குடும்பங்கள்பிழைத்துள்ளன.
தமிழக அரசின் பட்டுச்சேலை விற்பனை இந்த ஆண்டு 60 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார்.
இதற்கிடையே நெசவாளர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை கடன் பெறும் புதிய திட்டத்தை தமிழக அரசுஅறிகப்படுத்தியுள்ளது. இத் தகவலை கல்வி அமைச்சர் தம்பித்துரை தெரிவித்தார்.
தர்மபுரியில் அவர் கூறுகையில், நெசவாளர்களுக்கு நவீன தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்தபயிற்சி பெற்றவர்கள் நவீன் எந்திரங்கள் மூலம் நெசவுத் தொழிலில் ஈடுபட ரூ. 5000 முதல் 5 லட்சம் வரைகடனுதவி தரப்படும்.
கூட்டுறவு சங்கம் மூலம் கடன் வாங்குபவர்களுக்கு வட்டி சதவீதத்தைக் குறைப்பது குறித்து அரசு ஆலோசித்துவருகிறது என்றார் அவர்.
-->












Click it and Unblock the Notifications