அமெரிக்க பல்கலைகளில் பெருகி வரும் இந்திய மாணவர்கள்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.
அமெரிக்காவின் சர்வதேச கல்வி மையம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த மையத்தின் அறிக்கையை இதன் தலைவர் ஆலன் குட்மேன்இன்று வெளியிட உள்ளார். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
2001-2002 கல்வியாண்டில் அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் தான்.
மொத்தம் 66,836 இந்திய மாணவ, மாணவிகள் இங்கு உயர் கல்வி பயில்கின்றனர். மொத்த வெளிநாட்டு மாணவர்களில் இது 11.5சதவீதமாகும்.
இந்தியாவிலும் சீனாலும் உயர் கல்விக்கு போதிய இடங்கள் இல்லை. மிகப் பெரிய பல்கலைக்கழகங்கள் இருந்தாலும் கூட அரசிடம்போதிய நிதி வசதி இல்லை. இதனால் கல்விக்கு அதிக பணம் ஒதுக்கப்படுவதில்லை. ஆகவே உயர் கல்விக்காக வெளிநாடுகளை நாடும்இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த கல்வியாண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம்அதிகரித்துள்ளது.
இது தவிர சர்வதேச அளவில் மிகப் பெரிய வேலைகளில் சேர அமெரிக்கக் கல்வியும் அமெரிக்க சான்றிதழ்களும் உதவும் என்பதால்இதற்கான போட்டி இந்தியர்களிடையே அதிகரித்துள்ளது. இந்தியாவின் முன்னணி உயர் கல்வி மையங்களில் இடம் கிடைக்காதமாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் இடம் பிடிக்க தீவிரமாக முயற்சிக்கின்றனர்.
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகும் கூட அமெரிக்காவில் கல்விக் கூடங்களில் சேரும் இந்திய மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைசிறிதளவும் குறையவில்லை.
அமெரிக்காவில் கல்வி பயில விரும்பும் இந்திய ர்களிடையே உள்ள ஒரே கவலை விசா குறித்த கவலை தான்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவை நாம் மிகப் பெரிய நாடு, வேகமாக வளர்ந்து வரும் நாடு என்பதோடு மறந்துவிடுகிறோம். அங்கு மத்திய தர மக்களின்எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது. இந்த மக்கள் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகின்றனர் என்கிறார் சர்வதேச கல்வி மையத்தின்தலைவர் ஆலன் குட்மேன்.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் கல்வி மற்றும் கலாச்சாரப் பிரிவு இந்த ஆய்வுக்கான நிதியுதவியை சர்வதேச கல்வி மையத்துக்குவழங்கியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications