17 பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் தேர்வு எழுத கோர்ட் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அண்ணா பல்கலைக்கழகத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட 17 பொறியியல் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள்வழக்கம் போல நடைபெறலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் தேர்வுமுடிவுகளை நிறுத்தி வைக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் நிலச் சீர்திருத்த சட்டப்படி நடந்து கொள்ளவில்லை என்று கூறி 17 பொறியியல் கல்லூரிகளைச்சேர்ந்த மாணவர்கள் தங்களது பி.இ. முதலாவது செமஸ்டர் தேர்வுகளை எழுத முடியாது என்று அண்ணாபல்கலைக்கழகம் உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. மனுவைவிசாரித்த நீதிபதி பத்மநாபன், அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவு சரியானது தான் என்று கூறிவிட்டார்.

இதையடுத்து மாணவர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிசுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன் ஆகியோர் அடங்கிய முதலாவது பெஞ்ச் இம்மனுவை விசாரித்தது.பின்னர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்,

17 கல்லூரிகளையும் சேர்ந்த மாணவர்கள் வரும் வரும் 25ம் தேதி துவங்கும் தேர்வுகளை எழுத அனுமதிக்கவேண்டும்.

இருப்பினும் அவர்களது தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைக்க வேண்டும். நீதிமன்றத்தின் மறு உத்தரவுவரும் வரை முடிவுகளை வெளியிடக் கூடாது.

கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக தீர்ப்பு கிடைக்குமானால், மாணவர்கள் எழுதிய தேர்வும் ரத்து செய்யப்படும்.

மேலும், மறு உத்தரவு வரும்வரை மற்றைய பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறக் கூடாதுஎன்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+