"கை நழுவிப் போகவிருந்த காவிரியை காப்பாற்றியவர் ஜெ."
சென்னை:
தமிழகத்தின் கையிலிருந்து கைவிட்டுப் போகவிருந்த காவிரியை உச்ச நீதிமன்றத்தின் மூலம் தமிழகத்திற்குமீண்டும் கொண்டு வந்தவர் முதல்வர் ஜெயலலிதா என்று சமூக நீதிக் கட்சி தலைவர் ஜெகவீரபாண்டியன்தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
காவிரிப் பிரச்சினையில், கருணாநிதியும், இளங்கோவனும் செயல்படுவதைப் பார்க்கும்போது கர்நாடகத்திற்குஆதரவாக அவர்கள் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஆனால் ஜெயலலிதா காவிரி நதி நீரை உரிய நேரத்தில் தமிழகத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
நம்முடைய கையை விட்டு நழுவி விடுமோ என்று எல்லோரும் அஞ்சிக் கொண்டிருந்த நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நமது பங்கு நீரைப் பெற்றுத் தந்தார் ஜெயலலிதா.
அவரை விமர்சிக்கும் கருணாநிதியும், இளங்கோவனும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவர்கள்.
பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் உள்ள வாசகங்கைளத் திரும்பப் பெறுமாறு உச்ச நீதிமன்றம் கூறியதைதமிழகத்திற்கு ஏற்பட்ட அவமானமாக கருதும் இளங்கோவனுக்கு, உச்சநீதிமன்றத்தையே மதிக்காமல் நடந்துகொண்டு பின்னர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவின் செயல் தேசியஅவமானமாகத் தெரியவில்லையா என்று அவ்வறிக்கையில் கேட்டுள்ளார் ஜெகவீரபாண்டியன்.
-->












Click it and Unblock the Notifications