For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாயை அடித்த சித்தப்பாவை மிதித்தே கொன்ற வாலிபர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அருகே தாயை அடித்துக் காயப்படுத்திய சித்தப்பாவை ஒரு வாலிபர் மிதித்தே கொன்று விட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் டெல்லி. இவரது மகன்களான 60 வயதுஜெயாவுக்கும், 55 வயது ஏழுமலைக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.

இந்த நலையில் ஜெயாவின் மனைவி சகுந்தலாவின் அக்காள் மகளுக்கும், பல்லி என்பவருக்கும் இடையே புட்லூர்என்ற இடத்தில் திருமணம் நடந்தது.

அப்போது அங்கு வந்த ஏழுமலை, ஜெயாவின் மகளைப் போய் கல்யாணம் செய்து கொண்டுள்ளாயே என்றுபல்லியைப் பார்த்து சப்தம் போட்டார். அப்போது அங்கு இருந்த சகுந்தலா, ஏழுமலையிடம் எனது கணவரை ஏன்திட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு சகுந்தலாவை ஏழுமலை அடித்து கீழே தள்ளியுள்ளார். இதனால் அவமானமுற்ற சகுந்தலா வீட்டுக்கு வந்துதனது மகன் முத்துவிடம் நடந்ததைக் கூறினார்.

ஆத்திரமடைந்த முத்து வெகுண்டெழுந்தார். உடனடியாக சித்தப்பா ஏழுமலையின் வீட்டுக்குப் போனார். எனதுஅம்மாவையா அடித்தாய் என்று ஆவேசமாக கேட்ட முத்து, ஏழுமலையை கீழே தள்ளி காலால் பலமாகஉதைத்துள்ளார்.

பின்னர் ஆத்திரம் தீர ஏழுமலையை முத்து மிதி மிதியென்று மிதித்துத் துவைத்து விட்டார். இதில் படாத இடத்தில்பட்டு ஏழுமலை மூர்ச்சையானார்.

உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஏழுமலைஇறந்தார்.

ஏழுமலையின் மனைவி சலோமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் முத்துவைத் தேடி வருகிறார்கள்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X