For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பா.ம.க. தலைவருக்கு ஜாமீன் மறுப்பு: விரைவில் சரணடைவார்?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை நிர்வாகக் குழுவினரைத் தாக்கிய வழக்கில் பாட்டாளி மக்கள் கட்சிதலைவர் ஜி.கே. மணிக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

பி.டி. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையை நிர்வகிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலையடுத்துஅறக்கட்டளை நிர்வாகத்தை தற்காலிகமாக கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தங்கமணி தலைமையில் ஒரு குழுவைசென்னை உயர் நீதிமன்றம் அமைத்தது.

இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் பதவி ஏற்கச் சென்றபோது மணி மற்றும் காடுவெட்டி குரு என்ற எம்.எல்.ஏ.ஆகியோர் நீதிபதி தங்கமணி உள்ளிட்டவர்களைத் தடுத்து கலாட்டா செய்ததாகவும் அவர்களைத் தாக்கியதாகவும்கூறப்பட்டது.

இதையடுத்து மணி, காடுவெட்டி குரு உள்ளிட்டோர் மீது வழக்குத்தொடரப்பட்டு அவர்களைக் கைது செய்யஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் மணியும் காடுவெட்டி குருவும் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து போலீசார் 9 தனிப் படைகள்அமைத்து அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் மணி சார்பில் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு செய்யப்பட்டது.

அந்த மனு நீதிபதி பாக்கியராஜ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மணி மீதான புகார்களுக்குப் போதுமானஆதாரங்கள் உள்ளதால், முன் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி அம்மனுவைத் தள்ளுபடி செய்தார்.

எனவே விரைவில் மணி, காடுவெட்டி குரு உள்ளிட்டவர்கள் ஏதாவது ஒரு கோர்ட்டில் சரணடைவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X