திருக்கழுக்குன்றம் கோவிலுக்கு ஆஸ்திரேலிய கழுகுகள்
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள மலையில் இருந்த கழுகுகள் காணாமல் போயுள்ள நிலையில்,ஆஸ்திரேலியாவிலிருந்து புதிதாக கழுகுக் குஞ்சுகளை வரவழைத்து அவற்றிற்குப் பயிற்சி கொடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில்மலை. ரிக்,யஜூர், சாமம் மற்றும் அதர்வன வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு மலைக் குன்றுகள்இருப்பதால் இதற்கு வேதகிரீஸ்வரர் கோவில் என்று பெயர் வந்தது.
திருக்கழுக்குன்றம் என்றாலே அங்கு தினந்தோறும் வரும் கழுகுகள் தான் அனைவரின் மனதிலும் தோன்றும். இந்தமலையில் பல நூற்றாண்டுகளாக இரண்டு வெள்ளை நிற கழுகுகள் தினசரி பகல் சரியாக 12 மணிக்கு கோவில்பிரசாதத்தை உண்பதற்காக வரும். பிரசாதத்தை உண்டவுடன் மலையை சுற்றிவிட்டு மறைந்துவிடும்.
கோவிலில் காணப்படும் இந்த வெள்ளை நிறக் கழுகுகளைக் காண்பதற்காகவே ஏராளமானோர் இங்கு வருகைபுரிந்தனர்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கழுகைக் காணவில்லை. சமீபத்தில் மற்றொரு கழுகையும் காணவில்லை.இரு கழுகுகளும் மிகவும் வயதானவை என்பதால் அவை இரண்டும் இறந்து போயிருக்கலாம் என்றுகூறப்படுகிறது.
இவை தவிர வேறு கழுகுகளும் இங்கு வரவில்லை.
இந்த நிலையில் கழுகுகள் இல்லாத திருக்கழுக்குன்றம் களையிழந்து போனது. சுற்றுலாயப் பயணிகள் வருகையும்நின்று போனது.
இதையடுத்து மீண்டும் கழுகுகளை இங்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்தது. ஆட்சித் தலைவர்ராஜாராமன் முயற்சியின் பேரில் தற்போது ஆஸ்திரேலியாவிலிருந்து இரண்டு கழுகுக் குஞ்சுகளை கொண்டு வந்துஅவற்றிற்குப் பயிற்சி கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கழுகுக் குஞ்சுகள் வந்த பிறகு மீண்டும் திருக்கழுக்குன்றம் பழைய பொலிவைப் பெறும் என்றுநம்பப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
-->