Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனியார்வசமாகும் 50 சதவீத அரசு பஸ்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் 50 சதவீதத்தை தனியாருக்கு கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் ஓடிக் கொண்டிருக்கும் நகர பஸ்களில் 50 சதவீதம் தனியாருக்குச்செல்கின்றன.

மேலும் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மொத்த பஸ்களில் 50 சதவீதத்தையும் தனியாருக்குக் கொடுக்கமாநில அரசு முடிவு செய்துள்ளது.

போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கக் கூடாது என்று ஏற்கனவே பஸ் ஊழியர்கள் போராடி வந்தனர்.

கடந்த ஆண்டு போனஸ் கேட்டுப் போராட்டம் நடத்திய போது, தனியார் மயமாக்கும் அரசின் திட்டத்தையும்கடுமையாக எதிர்த்தனர் போக்குவரத்துக் கழக ஊழியர்கள்.

ஆனால் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போக்குவரத்துக் கழகங்களின் நிலையைச் சரிக்கட்ட அவற்றை தனியார்மயமாக்குவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று அரசு முடிவெடுத்தது.

பல மாதங்களுக்கு முன்பே இதுகுறித்து முடிவெடுத்த தமிழக அரசு, தற்போது போக்குவரத்துக் கழகங்களில் 50சதவீதத்தை தனியார் மயமாக்கவுள்ளது.

அனைத்து பஸ் ரூட்களிலும் தனியாரின் பங்கு இருக்கும். அதே சமயத்தில், அவர்களின் முழுமையானஆக்கிரமிப்பு இருக்காத வகையிலும் பார்த்துக் கொள்ளப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

பகிரங்க டென்டர் மூலம் இந்த ரூட்கள் தனியாருக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் என்றும் இதன் மூலம் கிடைக்கும்வருவாய் புதிய பஸ்களை வாங்கவும், பஸ் போக்குவரத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+