இந்திய சந்தைகளை ஆக்கிரமிக்கும் சீன பொருள்கள்
பெய்ஜிங்:
சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் இந்திய சந்தைகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளன.
பேனாக்களில் இருந்து எலெக்ட்ரானிக் பொருள்கள் வரை சீனாவின் தரம் உயர்ந்த, விலை குறைந்த பொருள்கள்இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
விரைவில் சீன மோட்டார் சைக்கிள்களும் புகுந்து இந்திய சாலைகளை ஆக்கிரமிக்க உள்ளன. நேபாளத்தில் இதுவரைசக்கைபோடு போட்டு வந்த இந்தியப் பொருள்களின் விற்பனை குறைய ஆரம்பித்துள்ளது.
அங்கும் சீன பொருள்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளன. இதனால் பல சீன பொருள்களுக்கு இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ளது.ஆனால், அதையும் மீறி சீன பொருள்களின் இறக்குமதி 34.4 சதவீதம் அதிகரித்துள்ளது. சுமார் 1.848 பில்லியன் டாலர் அளவுக்குசீன பொருள்கள் இறக்குமதியாகியுள்ளன.
அதே நேரத்தில் சீனாவுக்கு இந்திய பொருகள் ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது. கடந்த 9 மாதங்களில் இந்தியப் பொருள்களின்ஏற்றுமதி 22.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து 1.596 பில்லியன் டாலர் மதிப்புக்குள் பொருள்கள்ஏற்றுமதியாகியுள்ளன.
சீனாவில் இருந்து டிவி பிக்சர் டியூப்கள், எலெக்ட்ரானிக் பொருள்கள் தான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
சீன பைக்குகள் போன்றவற்றுக்கு விரைவில் அனுமதி தர இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த அனுமதி தரப்படடால் இந்தியசாலைகளை சீன பைக்குகள் ஆக்கிரமிக்கலாம்.
காரணம் அவற்றின் விலை, தரம் மற்றும் மாடல்கள். ரூ. 20,000க்கு சர்வதேச தரமும் மாடலும் கொண்ட பைக்குகளை சீனநிறுவனங்கள் விற்று வருகின்றன.
இந்தியாவில் 15,000க்கு மொபட் மட்டுமே வாங்க முடியும் சூழ்நிலை உள்ளது. இதுவரை நமது தலையில் மிளகாய் அறைத்துவந்த இந்திய மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள் சீனாவின் போட்டியை சமாளிப்பது கடினம் தான்.
-->