For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உசிலம்பட்டி அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 7 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

உசிலம்பட்டி:

உசிலம்பட்டி அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டதில் ஒரு சிறுமி, ஒரு சிறுவன்உள்பட 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

மதுரையிலிருந்து கம்பத்திற்குச் சென்று கொண்டிருந்த பஸ்சும், குமுளியிலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்தபஸ்சும் உசிலம்பட்டி அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

மோதிய வேகத்தில் இரண்டு பஸ்களின் முன் பகுதிகளும் பயங்கரமாக உடைந்து சிதறின. பல பயணிகள் தூக்கிஎறியப்பட்டனர். ஒரு பஸ் அருகில் உள்ள ஒரு புளிய மரத்தில் மோதி நின்றது.

இந்தப் பயங்கர விபத்தில் ஒரு சிறுவன், ஒரு சிறுமி உள்ளிட்ட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இரண்டு பேர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல்உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் மேலும் 30 பேர் படுகாயங்களுடன் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X