இன்று கூடுகிறது காவிரி கண்காணிப்புக் குழு
டெல்லி:
காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
காவிரியில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு நீர் திறந்து விடாததைக் கண்டித்து தமிழக அரசு தொடர்ந்த அவமதிப்புவழக்குகள் தொடர்பாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.
இதையடுத்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு நீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்குகள்தொடர்பான தீர்ப்பை ஒத்திவைத்தது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இம்மாதத் தொடக்கத்தில் தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடக அரசு நீர்திறந்து விட்டது.
இதற்கிடையே காவிரி ஆணையத்தின் தலைவரான பிரதமர் வாஜ்பாயை தமிழக முதல்வர் ஜெயலலிதா விமர்சனம்செய்திருப்பதையும் உச்ச நீதிமன்றம் கண்டித்தது. இதையடுத்து தன்னுடைய விமர்சனக் கடிதத்தை ஜெயலலிதாவாபஸ் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் காவிரியில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஒழுங்காக நீரைத் திறந்துவிட்டுள்ளதா என்பதைக்கவனித்து வந்த காவிரி கண்காணிப்புக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது.
மத்திய நீர்வளத் துறை செயலாளரான ஏ.கே. கோஸ்வாமி தலைமையில் இன்று பிற்பகலில் இந்தக் கூட்டம்நடைபெறவுள்ளது.
தமிழக, கர்நாடக தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து வரும் 29ம் தேதி பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையமும்கூடவுள்ளது.
இந்த இரண்டு கூட்டங்களிலும் ஏதாவது ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கடந்த 22ம் தேதி கூறிய உச்சநீதிமன்றம், கிருஷ்ணா மீதான அவமதிப்பு வழக்குகளின் இறுதித் தீர்ப்பை வரும் டிசம்பர் 5ம் தேதிக்குஒத்திவைத்துள்ளது நினைவிருக்கலாம்.
மேட்டூர் நீர்மட்டம் 61.05 அடி:
இதற்கிடையே மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 61.05 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 3,047 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் விநாடிக்கு 2,082 கன அடி நீர்அங்கிருந்த வெளியேறிக் கொண்டிருக்கிறது.
-->












Click it and Unblock the Notifications